
கோலாலம்பூர், மார்ச் 20 –
பெர்லிஸ் மாநிலம் முழுமையிலும் கெடா
மாநிலத்தின் பொக்கோ செனாவிலும் பதிவாகும் இரண்டாம் கட்ட வெப்ப
நிலை காரணமாக இன்று அப்பகுதிகளில் வெப்ப அலை ஏற்படும் என்று
வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
ஓரிடத்தில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு 37 முதல் 40 டிகிரி
செல்சியஸ் வரையிலான வெப்பம் ஏற்படும் போது வெப்ப அலை அல்லது
இரண்டாம் கட்ட நிலை உண்டாகும் என்று அறிக்கை ஒன்றில்
வானிலை ஆய்வுத் துறை கூறியது.