புத்ரா ஜெயா ஏப்ரல் 4- மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இந்தோனேசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரும், பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாண்டோவை மரியாதை நிமித்தமாக வரவேற்றார்.
பிரபோவோ தனது சிறப்பு ஒருநாள் மலேசியப் பயணத்தின் ஒரு பகுதியாக காலை 9 மணிக்கு ஸ்ரீ பெர்டானா புத்ரா ஜெயாவுக்கு வருகை புரிந்தார்.
2024-2029 காலத்திற்கான இந்தோனேசிய அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மலேசியாவுக்கு வருகை புரிவது இதுவே முதல் முறையாகும்.
- பெர்னாமா