ருவாண்டா அதிபருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு- இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு!

ரியாத், ஏப் 29- சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் உலகப்
பொருளாதார ஆய்வரங்கின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூட்ட இடைவேளையின் போது
ருவாண்டா அதிபர் பால் ககாமேவைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள்
குறித்து விவாதித்தார்.

இந்த சிறப்பு பொருளாதாரக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வுக்குப் பிறகு
காலை 11.40 மணியளவில் (உள்ளூர் நேரம்) தொடங்கிய இச்சந்திப்பு சுமார்
30 நிமிடங்களுக்கு நீடித்தது.

இந்த சந்திப்பின் போது மலேசியாவுக்கு வருகை புரியும்படி அதிபர்
ககாமேவுக்கு அன்வார் அழைப்பு விடுத்தார். அதிபர் ககாமேவும் தங்கள்
நாட்டிற்கு வருகை தரும்படி அன்வாரைக் கேட்டுக் கொண்டார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles