பிறை சட்டமன்ற தொகுதியில்தையல் கலை பயிற்சியில் இந்திய பெண்கள் அபாரம்!

செ.வே. முத்தமிழ் மன்னன்

பிறை, ஏப்ரல் 29-
பினாங்கு மாநில பிறை சட்டமன்ற தொகுதியில் இந்திய பெண்களுக்காக ஆறு வார கால தையல் கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த குறுகிய காலத்திலேயே இந்திய பெண்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் தையல் கலையில் பெரும் ஆர்வம் செலுத்தி வருவதாக பத்து காவான் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

அடிப்படை தையல் பயிற்சியானது பயன்படுத்தக்கூடிய அல்லது சாத்தியமான வாழ்க்கைப் பாதையாக தொடரக்கூடிய நடைமுறை தையல் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாடநெறியின் முடிவில், பங்கேற்பாளர்கள் அடிப்படை தையல் திட்டங்கள் மற்றும் மாற்றங்களை சுயாதீனமாக மேற்கொள்வதற்கான நம்பிக்கையையும் திறமையையும் பெற்றிருப்பார்கள்.

இந்த பாடநெறி படைப்பாற்றல் மற்றும் தன்னிறைவை வளர்ப்பது மட்டுமல்லாமல், பகிரப்பட்ட கற்றல் அனுபவங்கள் மூலம் சமூக ஈடுபாடு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் என்று அவர் சொன்னார்.

இந்திய பெண்களுக்கான இந்த தையல் கலை பயிற்சி சிறப்பாக நடைபெற பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ மற்றும் கவுன்சிலர் பொன்னுத்துரை ஆகியோர் முழு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதனிடையே, இந்திய சமுதாயத்தின் பெண்களின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் இந்த தையல் கலை பயிற்சி அமர்ந்திருப்பது பாராட்டுக்குரியது என்று டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles