ஜங்காட் ஜோங், மே 17-
தாய், தந்தைக்கு அடுத்ததாக மதிக்கப்படும் ஒருவர் என்றால் அது ஆசிரியராக இருக்க முடியும்.
அந்த வகையில் நேற்று உலக முழுவதும் ஆசிரியர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பேராக் மாநிலத்தில் உள்ள ஜங்காட் ஜோங் சிதம்பரம் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் தின விழா களைகட்டியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி விமலா பாலன் தலைமையில் கொண்டாடப்பட்ட இந்த ஆசிரியர் தின விழாவில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Persatuan Penggerak.Digital Munnetra Malaysia மற்றும் Persatuan Kebajikan dan kemajuaan masyarakat hilir perak தலைவர் சிவபாலன் முனியாண்டி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்தினார்.