

மா. பவளச்செல்வன்
ஜொகூர் பாரு, ஜூன் 12-
ஜொகூர் பாரு அருள்மிகு ராஜ மாரியம்மன் தேவஸ்தான ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று ஆகம முறைப்படி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், ஜொகூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் ரவீன், ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம் குமார், ம இகா மகளிர் அணி தலைவி புவான் சரஸ், ஜொகூர் ஆம் இகா தலைவர் நி
வித்யானந்தன் , ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோஜன், ஆலய அறங்காவலர் டத்தோ நீலா ராஜா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புதிதாக திருப்பணி செய்யப்பட்டிருக்கும் இந்த ஆலயம் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.