1எம்டிபி உட்பட பழைய ம கடன்களை அடைக்க நாடு ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்க வேண்டியிருந்தது- பிரதமர் அன்வார் விளக்கம்

புத்ரா ஜெயா, ஜூலை 23-
1எம்டிபி தொடர்பான கடன்கள் உட்பட, இதற்கு முன் கடன்களைச் செலுத்துவதற்கு நாடு ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்க வேண்டியிருந்தது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டின் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறுபவர்கள் அது ஏன் நடந்தது என்பதற்கான உண்மையான காரணத்தைக் காணவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் உள்கட்டமைப்புக்காக கடன் வாங்குகிறது மற்றும் முந்தைய கடன்களைச் செலுத்துகிறது.

கடந்த வாரம், மத்திய அரசின் கடன் கடந்த ஆண்டு இறுதியில் ரிம1.17 டிரில்லியனாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ரிங்கிட் 50 பில்லியன் அதிகரித்து 1.22 டிரில்லியன் ரிங்கிட் ஆக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

1எம்டிபி பெற்ற கடன் RM48 பில்லியன் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் முந்தைய கடனைத் தீர்க்க கடன் வாங்கிய பணம் அரசாங்கத்தின் மிகப்பெரிய சுமையாகத் தொடர்கிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles