துரோனோ தமிழ் பள்ளிக்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ சிவகுமார் 10,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்தார்!

செ.வே.முத்தமிழ்மன்னன்

துரோனோ, ஆக 8-
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ சிவகுமார் தனது தொகுதியில் உள்ள மக்களுக்கு, வழிபாட்டு தலங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு மனம் கோணாமல் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தமது தொகுதிக்கு உட்பட்ட துரோனோ தமிழ்ப் பள்ளிக்கு அவர் 10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பங்களிப்பு இந்திய சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக சமூகத்திற்கு கல்வி பணி செய்து வரும் SJK(T) Tronoh, இப்போது உடனடி கவனம் தேவைப்படும் உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்கிறது.

மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒன்று கூடும் சபையின் தளத்தில் ஒரு மூடப்பட்ட கூரையை அமைப்பது அவசர தேவைகளில் ஒன்றாகும்.

அந்த வகையில் இந்த நன்கொடையானது, ஒவ்வொரு மலேசியக் குழந்தையும், எந்தப் பின்னணியில் இருந்தாலும், தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இது SJK(T) Tronoh கல்வியில் சிறந்து விளங்கவும், மதிப்புகளை வளர்க்கவும் உதவும் என்று நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.

இதனிடையே துரோனோ தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர் மாரியப்பன் கூறுகையில் தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

எல்லாம் கலங்காட்டத்திலும் அவர் தனது தொகுதியில் உள்ள அனைத்து மொழி பள்ளிகளுக்கும் பாராபட்சம் இன்றி உதவிகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles