

ஈப்போ அக் 13-
கடந்த 16 ஆண்டு்காலமாக கால் பந்துத் துறையில்்சிறுவர்கள முதல் இளைஞர்கள் வரை ஊக்குவிக்க தமது சேவை தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில். அதன் ஆண்டு நிறைவு விழைவை முன்னிட்டு ஈப்போவில உள்ள ஈப்போ பாடாங்கில் கால் பந்துப்போட்டியை நடத்தியது.
எட்டு வயது முதல் 16 வயதிற்கும் உட்பட்ட 20 குழுக்கள் பங்கேற்றது .இதில் சுமார் 250 பேர் பங்கற்றனர்.
அதிகமான தமிழ்ப்பளி மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈப்போ பிரைடே கிளப் தோற்று விக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 16 ஆண்டுகள் இளையோர்களுக்கு வழங்கி வரும் கால் பந்து பயிற்சியில் இது சுமார் ,5 ஆயிரம் பேர் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.
அவர் நாட்டில் பல மாநிலங்களில் விளையாடி வருவதாக ஈப்போ பிரைடே கிளப்பின் தலைவர் ஆர். விக்னேஸ்வரன் கூறினார்.
.
இந்த கிளப்பின் முதன்மை நோக்கம் , கால் பந்துத் துறையில் இளையோர்கள ஊக்குவிக்கப்படவேண்டும் என்பது என்றார்.
இதற்கு பலரின் ஆதரவு வழங்கி வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
.
இங்கு நடைபெற்ற கால்பந்துப் போட்டியை பேரா மாநில முன்னாள் கால் பந்து பயிற்றுனர் டத்தோ எம் . கரத்து தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.