ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்து

கெய்ரோ, நவ.13 – மடாணி அரசின் கொள்கையின்படி ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், எடுக்கப்படும் நடவடிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றார்.

நாம் உறுதியுடன் இருந்தால், முறையான ஊழலை ஒழிப்பதில் தீவிரமாக இருந்தால், அமலாக்கத் துறையினர் தொழில் ரீதியாக தங்கள் வேலையைச் செய்ய அனுமதிப்போம்.

இப்போது அல்லது அடுத்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தக்கூடாது.
நீங்கள் என்னைக் கேட்டால் விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும். அது வெளிப்படையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் எப்போது? அது (அதிகாரிகளின்) ஆற்றலைப் பொறுத்தது என்று அவர் சொன்னார்.

நேற்று, எகிப்து நாட்டிற்கான பயணத்தின் முடிவில் மலேசிய செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles