வெள்ளம் பாதித்த பகுதிகளில் மொத்த கழிவுகளை அகற்ற 600 ரோரோ தொட்டிகள் ஏற்பாடு!

ஷா ஆலம், டிச 3: வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீட்டு தட்டுமுட்டு மொத்தக் கழிவுகளை அகற்ற 600 ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகளை KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) வழங்குகிறது.

வெள்ளத்திற்குப் பிந்தைய உதவி பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சேதமடைந்த வீட்டு தளபாடங்களை அப்புறப்படுத்துவதை எளிதாக்கியது என KDEB கழிவு மேலாண்மை நிர்வாக இயக்குனர் கூறினார்.

“அனைத்து கருவிகளும் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன. கடந்த வாரம் மேருவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அங்குள்ள குடியிருப்பாளர்கள் சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்த நாங்கள் ரோரோவை அனுப்பினோம்.

“அதே நேரத்தில், துப்புரவு செயல்முறை சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, காம்பாக்டர் டிரக்குகள் போன்ற பிற வாகனங்களும் நல்ல நிலையில் உள்ளன” என்று டத்தோ ராம்லி தாஹிரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்த வார இறுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு நிகழ்வைக் கருத்தில் கொண்டு அனைத்து துப்புரவு ஊழியர்கள் விடுமுறையும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles