



கோலாலம்பூர் செப் 19-
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக முத்தமிழ் மன்னன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டாக்டர் ஆர்.டி. உதயகுமார், டாக்டர் தமிழ்ச் செல்வி மற்றும் டாக்டர் யோகேஸ்வரன் ஆகியோர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டனர்.
இன்று வேட்புமனு தாக்கல் சீராக நடைபெற்றது. 18 பொறுப்புகளுக்கு மொத்தம் 27 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள் பின்வருமாறு;-
தலைவர் பதவி செ.வே.முத்தமிழ் மன்னன் (தினத்தந்தி ஆசிரியர்) போட்டியின்றித் தேர்வு
துணைத் தலைவர் பதவி பொறுப்பிற்கு இருவர் போட்டியிடுகின்றனர்
பார்த்திபன் நாகராஜன் (நம்பிக்கை)
காளிதாசன் தியாகராஜன் என்கிற பெரிய காளி (தமிழ் லென்ஸ் )
மூன்று உதவித் தலைவர்களுக்கான பொறுப்பிற்கு ஐவர் போட்டியிடுகின்றனர்
தர்வின்குமார் கார்மேகம் (அநேகன்)
இரவி முனியாண்டி (அநேகன்)
ஆர்.குணா (நண்பன்)
எஸ்.ஜீவராஜா (நண்பன்)
காளிதாசன் இளங்கோவன் என்ற சின்ன காளி தமிழ் லென்ஸ்)
செயலாளர் பதவிக்காக போட்டியில் பத்மவிலோஷன ரூபன் ( தென்றல் ) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல் துணைச் செயலாளராக தீபன் கிருஷ்ணண் ( தமிழ் லென்ஸ்) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
பொருளாளராக கிரிஸ்ட் சின்னப்பன் (பெர்னாமா) போட்டியின்றித் தேர்வு பெற்றார்.
பத்து பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு மொத்தம் 16 பேர் போட்டியிடுகின்றனர்
- பிரேம் ஆனந்த் தண்ணிமலை – (ஆர்டிஎம்)
- சங்கீதா ராமச்சந்திரன் (நண்பன்)
- புனிதா இராதாகிருஷ்ணன் (நண்பன்)
- சாந்தா கிருஷ்ணன் (மக்கள் ஓசை)
- சுமதி கிருஷ்ணன் (மக்கள் ஓசை)
- இராமேஸ்வரி முனுசாமி (மக்கள் ஓசை)
- விஜயலெட்சுமி மணிமன்னன் (நண்பன்)
- கிருஷ்ணன் பெருமாள் (தமிழ் நேசன்)
- மைக்கல் சவரிமுத்து (தமிழ் மலர்)
- அமுதா லஷ்மணன் (நண்பன்)
- பவளச்செல்வன் மாரிமுத்து (தினத்தந்தி)
- கோபிகிருஷ்ணன் இராஜகோபால் (தமிழ் மலர்)
- சுந்தர் மருதமுத்து (தமிழ் நேசன்)
- இராமன்குட்டி வெள்ளையன் (மக்கள் ஓசை)
- மூர்த்தி சுப்பிரமணியம் (ஆர்டிஎம்)
- நிர்மலா செல்வம் (மக்கள் ஓசை )

