
ஷா ஆலம், ஜூன் 21 : கோலா குபு பாரு தொகுதியில் எஸ்பிஎம் தேர்வில் (2023) சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
தேர்வில் குறைந்தபட்சம் 5A பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 20 வரை (இன்று) இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவோ கூறினார்.
மேலும், RM100 (5A), RM150 (6A), RM200 (7A), RM250 (8A), RM300 (9A) மற்றும் 10A மற்றும் அதற்கு மேல் RM350 வழங்கப்படும் என அவர் கூறினார்.
மாணவர்களின் பெற்றோரில் ஒருவர் கோலா குபு பாரு தொகுதியின் வாக்காளராக இருப்பதும் அவசியம்”
என்று பாக் சோக் தாவ் முகநூலில் தெரிவித்தார்.

