மைபெலி குருப் பிறந்த மற்றும் குடும்ப தின விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது!

புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பகிஹியா டாக்டர் மனோ பரமசிவம் தலைவராக கொண்டிருக்கும் மைபெமிலி குருப் குடும்பத்தின நேற்று செராஸ் லோக் இயூ உணவகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பேராக் மாநில சொக்சோ தலைவர் மோகன், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரிய உறுப்பினர் ஜெயக்குமார், ஆர்கிடேட் திருலோகச்சந்தர், சைபர் ஜெயா ஆல் இன் ஆல் உணவகத்தின் உரிமையாளர் தீபன், இளமாறன், டத்தோ மணியரசு, மலேசிய காது கேளாதோர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜோர்ஜ், கம்போங் பண்டான் ராஜா, இளம் தொழில் முனைவர் சுப்ரா, புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி பங்சார் தமிழ்ப் பள்ளி வாரிய தலைவர் டத்தோ சங்கர் , டாக்டர் நாகராஜ் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் பிறந்த நாள் கொண்டாடிய ஸ்டார் மணியம், டாக்டர் ரவி பிஜேகே, டத்தோ டாக்டர் ஜெகா, டத்தின் ராம்குமாரி, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் தலைவி டாக்டர் ஷினா மற்றும் டாக்டர் செல்வராஜ் மற்றும் மே சான் ஆகியோருக்கு மாலைகள் அணிவித்து பிறப்பிக்கப்பட்டது.

விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன் – டாக்டர் தமிழ் செல்வி பிறந்த நாள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

புக்கிட் பிந்தாங் குணாவின் சகோதரர்கள் ராஜா, ஸ்ரீதரன், ரோய், அசோக் சர்மா, இளம் தொழில் முனைவர் பாலு குளோபல் வெல்பர் இயக்கத்தின் தலைவர் மகேஷ், சிவகுமார் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

விலாயா மாநில சிலம்ப கழக தலைவரும் மைபெமிலி குருப் துணை தலைவருமான டாக்டர் ஆர்டி உதயகுமார் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles