

பத்துமலை, ஜன 1-
பத்துமலை திருத்தலத்தில் குடி கொண்டிருக்கும்
140 அடி உயர தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு இன்று காலையில் பன்னீர் அபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் முயற்சியில் 140 அடி உயர முருகன் சிலை பத்துமலையில் கட்டப்பட்டது.
தற்போது இச்சிலை மலேசியாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு இம்முருகப் பெருமானுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 9ஆம் ஆண்டு பன்னீர் அபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் நடைபெற்றது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலையிலேயே பத்துமலையில் பெரும் அளவில் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

