
பொதுச் சேவைத் துறையில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டுமென்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமி கோரிக்கை விடுத்ததில் தவறேதும் இல்லையென சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசுத் துறையில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் விகிதாசாரப்படி வாய்ப்பு வழங்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்ததில் தவறு இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மற்ற இனங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பைப் பறித்து சீன, இந்தியர் சமூகத்திற்கு வழங்க வேண்டுமென்று அவர் கேட்கவில்லை.
ஒரு காலத்தில் அரசுத் துறையில் கணிசமான இந்தியர்கள் இருந்ததைக் குறிப்பிட்டே, அரசுப் பதவிகளில் 5 விழுக்காடு இந்தியர்களுக்கு வாய்ப்பு தர வேண்டுமென்று அவர் கேட்பது நியாயம்தான் என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.

