
கோலாலம்பூர் மார்ச் 1 –
பெட்டாலிங் ஜெயாவில் வீற்றிருக்கும் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவ திரு பால யோகி சுவாமிகளின் ஆசியோடு உலக வரலாற்று பதிப்பக தமிழில் அமைந்த இந்து கலைக்களஞ்சிய நூல்கள் நாளை தமிழ் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 4,200 பக்கத்தில் 12 பிரதிநிதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பெட்டவன் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் இந்த நூல்கள் இலவசமாக தமிழ் பள்ளிகளுக்கும் திரு கோவில்களுக்கும் வழங்கப்படும் என்று இருப்பிடத்தின் செயலாளர் கண்ணா தெரிவித்தார்

