
ஷா ஆலம், மார்ச் 14
– இலவச விசா அனுமதித் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு
வரும் சீன மற்றும் இந்திய சுற்றுப்பயணிகள் தாயகம் திரும்புவதற்கான
விமான டிக்கெட்டையும் ஹோட்டல் முன்பதிவையும் கொண்டிருப்பதை
உறுதி செய்யும்படி விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விசா சலுகையை தவறாகப் பயன்படுத்துவது, நாட்டில் அதிக
நாட்கள் தங்கியிருப்பது மற்றும் குடிநுழைவுத்துறை விதிகளை
முறையாகப் பின்பற்றாதது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படுவதை உறுதி
செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று உள்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

