
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 20-
பல்வேறு போராட்டங்கள் மற்றும் சவால்களை கடந்து இன்று 71 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மைபிபிபி கட்சிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சுரேந்திரன் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் மைபிபிபி கட்சி கடந்து வந்த பாதைகள் கரடு முரடானது.
எல்லாவற்றையும் கடந்து இன்று டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் மைபிபிபி கட்சி எழுச்சி பாதைக்கு திரும்பி இரருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் மைபிபிபி கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் உற்சாகத்துடன் சமுதாயப் பணி ஆற்ற முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

