கோலாலம்பூர், மே 18 – ஜொகூரில் இருபதுக்கும் மேற்பட்ட ஜெமா இஸ்லாமியா (ஜே.ஐ.) அமைப்பின் உறுப்பினர்கள் இருப்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தஸைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை உலு திராம் காவல் நிலையத்தின் மீது அந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஜே.ஐ. தீவிரவாதக் கும்பலின் நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் மரணமடைந்ததோடு மற்றொருவர் பலத்தக் காயமடைந்தார். சந்தேக நபரும் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மற்ற பகுதிகளில் கணக்கில் வராதவர்களும் இருக்கக்கூடும் என்பதால் இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புவதற்கு காரணம் உள்ளது என்று டான்ஸ்ரீ ரஸாருடின் சொன்னார்.
அனைத்தும் காவல்துறையின் விசாரணையில் உள்ளன என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
பெர்னாமா