
அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேச கூட்டணி கட்சிகள் 151 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் 22 தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பா.ஜ., மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு களத்தில் இறங்கினார்.
தெலுங்கு தேச கட்சி (பா.ஜ.,+ பவன் கல்யாண் கட்சி)- 151 தொகுதிகள் – ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் – 22 தொகுதிகள்
dinamalar

