
பத்துகாஜா, ஜுன்.8: இங்குள்ள தாமான் கெர்பாங் சாரி, செபூத்தே மாற்றுத்திறனாளி நண்பரை நேரில் சென்று பார்த்தார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்.
அவர் ஒரு தொழில் முனைவர். அவருக்கு நிதி உதவி தேவைப்பட்டது.தம்முடய சிறு வணிகத்தை நடத்தி வருகிறார். மக்கள் சேவை மைய நண்பர்களுடன் , செபூத்தே கிராமத்து தலைவர் ஆகியோருடன் சேர்ந்து இந்தத் தொழிலதிபரை அவரது வீட்டிற்கு சென்று கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவருக்கு உதவும் பொருட்டு வியாபாரம் செய்ய ஓரளவு நிதி உதவியும் வழங்கப்பட்டது. அவர் தொடங்கும் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்று சிவகுமார் வாழ்த்தினார்.

