
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இடங்களில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி நேற்று கேரளா வந்தார்.
தொடர்ந்து தொகுதி மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மோடியிடம் பரமாத்மா பேசுவது போல என்னிடம் பேசுவதில்லை. நான் அவரைப் போல கடவுள் அல்ல என்பதுதான் அதற்கு காரணம். நான் சாதாரண மனிதன். மக்கள்தான் என்னுடைய தெய்வம் என்று தெரிவித்தார்.

