துப்பாக்கி முனையில் நகைக் கடையில் கொள்ளை- நான்கு கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

காஜாங், ஜூன் 18- காஜாங் நகரின் பேரங்காடி ஒன்றில் உள்ள நகைக்கடையில் துப்பாக்கியேந்தி கொள்ளையிட்டுத் தப்பிய நான்கு ஆடவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இரு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கியேந்திய அந்த நான்கு கொள்ளையர்களும் பாதுகாவலர் சீருடையில் முகமூடி மற்றும் கையுறை சகிதம் அந்த பேரங்காடியின் முதல் மாடியிலுள்ள நகைக்கடையை நேற்று மாலையில் முற்றுகையிட்டதாக காஜாங் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது நாசீர் ட்ராமான் கூறினார்.

அந்த நகைக்கடையின் கண்ணாடிப் பேழையை சுத்தியலைப் பயன்படுத்தி உடைத்த அக்கொள்ளையர்கள் அதிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டனர். பின்னர் கடையின் மேற்கூரையை நோக்கி துப்பாக்கி வேட்டு கிளப்பிய அவர்கள் கட்டிடத்தின் கீழ்த்தளத்திலுள்ள கார் நிறுத்தம் வழியாகத் தப்பினர் என்று அவர் சொன்னார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles