ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஒரு சிறுமியும் மற்றும் இரண்டு இளம் பெண்களும் காணாமல் போயுள்ளனர்

சிரம்பான், ஜூலை 3: கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலா பிலாவில் உள்ள அரசு சாரா நிறுவனத்திற்கு (என்ஜிஓ) சொந்தமான ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஒரு சிறுமியும் மற்றும் இரண்டு இளம்பெண்களும் காணாமல் போயுள்ளனர்.

மேலும், 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் அம்மூவரும் காணாமல் போனது தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட பராமரிப்பு மையத்தின் நிர்வாகத்திடமிருந்து அதே நாள் இரவு 10.30 மணியளவில் தனது தரப்புக்கு வந்ததாகக் கோலா பிலா மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அம்ரன் முகமட் கானி தெரிவித்தார்.

“விசாரணையில் அவர்கள் இந்த மாநிலத்தில் பிறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரையும் தேடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் அவர்களின் விவரங்களும் நோர் எச்சரிக்கை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“இந்த விவகாரம் குறித்து சமூக நலத் துறை (ஜேகேஎம்) மற்றும் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் விடுதியிலிருந்து தப்பிச் சென்றதற்கான காரணத்தை அடையாளம் காண தொடர்புடைய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன,” என்று அவர் கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles