
புத்ராஜெயா: ஜூலை 12-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தலைமை தாங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில், மரணத்திற்கு வழிவகுக்கும் இணைய மிரட்டல் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கூறுகையில் ப
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (MCMC) மற்றும் ராயல் மலேசியன் போலீஸ் (PDRM) குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்தார் என்று அவர் கூறினார்.
“சைபர் மிரட்டல் குறித்து பிரதமர் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
MCMC மற்றும் PDRM மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்,
மேலும் இணைய மிரட்டல் தொடர்வதைத் தடுக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்,” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் பாமி பட்சில் கூறினார்.
ஈஷா எனப்படும் , ஏ ராஜேஸ்வரி வயது 30, இணைய மிரட்டலுக்கு ஆளானதால் அவர் எதிர்கொண்ட அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு காண்டோமினியத்தில் உள்ள அவரது வீட்டில் ஈஷா இறந்து கிடந்தார்.
இணைய அச்சுறுத்தல் பிரச்சினையை சமாளிக்க எடுக்கப்படும் மூன்று நடவடிக்கைகள் குறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

