
ஷா ஆலம், ஜூலை 18 – சரவாக் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 17 முதல் 24 வரை நடைபெறும் 2024 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) மாநிலத்தின் சார்பில் 704 விளையாட்டு வீரர்கள் மற்றும் 213 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
ஜூலை 5 ஆம் தேதி பதிவு செய்யும் காலக்கெடுவிற்கு முன்னதாக அனைத்து விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் உட்பட அதிகாரிகள் ஈராண்டிற்கு ஒரு முறை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிக்கு பட்டியலிடப் பட்டுள்ளதாக சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குனர் முகமட் நிஜாம் மர்ஜுக்கி கூறினார்.

