இஸ்ரேலை இடைநீக்கம் செய்ய பாலஸ்தீனம் முயற்சி- முடிவை ஒத்தி வைத்தது ஃபிபா!

லண்டன், ஜூலை 19 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டி முடியும் வரை அனைத்துலக நிலையிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து இஸ்ரேலுக்கு தடை விதிக்க பாலஸ்தீனம் செய்துள்ள கோரிக்கை மீது முடிவெடுப்பதை ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் ஒத்தி வைத்துள்ளது.

தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க இரு தரப்பும் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதே முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்று ஃபிபா கூறியது.

காஸா போரை காரணம் காட்டி இஸ்ரேலை இடைநீக்கம் செய்ய பாலஸ்தீன கால்பந்து சங்கம் கடந்த மே மாதம் பரிந்துரையை தாக்கல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடி சட்ட மதிப்பீட்டிற்கு உத்தரவிட்ட ஃபீபா, எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் அதன் கவுன்சில் கூட்டத்தின் போது இதன் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles