
ஷா ஆலம், செப். 19 – இளம் தலைமுறையினர் மத்தியில் சமய நெறியை
ஊட்டுவதில் அளப்பரிய பங்கினை ஆற்றி வரும் மலேசிய இந்து தர்ம
மாமன்றத்தின் பொறுப்பாளர்களை தாம் பெரிதும் பாராட்டுவதாகக் கிள்ளான்
நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
இந்த சமயம் பற்றி தவறாக வியாக்கியானம் செய்யும் மற்றும்
பிரிவினையை ஏற்படுத்தும் தரப்பினரிடமிருந்து சமயத்தை காக்க
இளையோர் மத்தியில் சமய நெறிகள் போதிக்கப்படுவது அவசியம்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள மிட்லண்ட்ஸ்
தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி
மாணவர்களுக்கான ஐந்து நாள் இந்து தர்ம அடிப்படை சமய வகுப்பினை
முடித்து வைக்கும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் கினி

