பெய்ரூட் மீது தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்!

ஜெருசலேம்: அக் 9-
பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து 8ஆம் தேதி காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்தாலும் போர் இன்னமும் நீடிக்கிறது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா உள்பட பல முக்கிய போராளிகள் பலியாகி விட்டனர்.

இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சுஹைல் ஹூசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles