பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தோனிசிய அதிபர் பிரபோவோவுடன் சந்திப்பை நடத்தினார்!

ஜாகார்த்தா அக். 21- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தோனிசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் நேற்று ஜகார்த்தாவில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.

குடியரசின் எட்டாவது அதிபராக பிரபோவோவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தோனிசிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சனிக்கிழமை தொடங்கி அன்வார் இங்கு பணி விஜயம் செய்து வருகிறார்.

“இன்றிரவு, எனது உண்மையான நண்பரும் சகோதரருமான பிரபோவோ சுபியான்டோவை சந்தித்தேன்”.

“நாங்கள் தனிப்பட்ட மட்டத்தில் மட்டுமல்லாமல் மாநில மட்டத்திலும் நட்பின் உணர்வுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவோம், இது நிச்சயமாக இரு நாடுகளின் மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரும்” என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்
[23:51, 20/10/2024] Mannan TM: பேரா மாநில சமுக நல சமுதாய நேர்மை இயத்தின் உதவிகள்

ஈப்போ அக் 21-
தீபாவளி தினத்தையொட்டி, பேராக் மாநில சமூக நல சமுதாய நேர்மை இயக்கம் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியது.

குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டதாக
குழந்தைகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தீபாவளிப் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அச்சங்கத்தின் தலைவர் சரஸ்வதி ஆறுமுகம் கூறினார்

தெலுக் இந்தான் , சுங்கை சிப்புட் மற்றும் ஈப்போவில் உள்ள வசதி குடும்பங்கள அடையாளம் கண்டு இந்த உதவிகள் வரங்கியதாக அவர குறிப்பிட்டார்.

இந்த சேவையை தமது இயக்கம் ஆண்டு தோறும் வழங்குவதாக தெரிவித்த அவர் பெருநாள் காலங்களில மட்டும் இந்த சேவை வழங்கவில்லை மாறாக தேவையை எதிர்நோக்கும் மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்

இந்த உதவி அவர்களின் குடும்பத்தின் செலவுகளின் சுமையை சிறிது குறைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles