
கோலாலம்பூர், நவ. 7-
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (KPKM) கைவிடப்பட்ட விவசாய நிலத்தை நெல் சாகுபடிக்காக மீண்டும் அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தி, அதன் மூலம் நாட்டின் அரிசி தன்னிறைவு அளவை (SSR) உயர்த்துகிறது.
நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூரில் கைவிடப்பட்ட நெல் வயல்களின் பல பகுதிகளை அமைச்சகம் கண்டறிந்துள்ளது என அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.
“கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தேசிய அரிசி தன்னிறைவு அளவு 56.2 சதவீதத்தை எட்டியது.
மீதமுள்ளவை இன்னும் இறக்குமதி செய்யப்பட வேண்டும். ஒரு நாள் மற்ற நாடுகள் தங்கள் அரிசியை ஏற்றுமதி செய்வதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
“உலகின் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் எதிர்பாராத வானிலை மாற்றங்கள் இப்போது நிகழும் நிலையில், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நடப்பது சாத்தியமற்றது அல்ல,” என்று அவர் கூறினார்.
இடம்பெயர்வு மற்றும் நெல் சாகுபடியில் இளைய தலைமுறையினரின் ஆர்வமின்மை காரணமாக கைவிடப்பட்ட பல நிலங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

