
கோலாலம்பூர், நவ 7-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டார் துன் ரசாக்கில் வரும் நவம்பர் 9இல் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
Institut Latihan DBKL (IDB) என்ற இடத்தில் காலை 10.30 முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த தீபாவளி விருந்து உபசரிப்பில் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா, பிரதமரின் அரசியல் செயலாளர் மற்றும் விலாயா மாநில கெஅடிலான் தலைவர் டத்தோ அஸ்மான் ஆகியோருடன் பண்டார் துன் ரசாக் கெஅடிலான் உதவித் தலைவர் ஜோனதன் வேலா கலந்து கொள்கிறார்கள்.
சுற்று வட்டார மக்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

