உள்ளூர் சந்தையில் காய்கறிகளின் விலை அடுத்த மார்ச் மாதத்தில் சீராகும்!

தும்பாட், டிச 19: வடகிழக்கு பருவமழை (எம்டிஎல்) முடிந்த பிறகு, உள்ளூர் சந்தையில் காய்கறிகளின் விலை அடுத்த மார்ச் மாதத்தில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

தற்போது நிலவும் நிச்சயமற்ற காலநிலையால் காய்கறிகளின் வரத்து குறைந்து விற்பனை விலை உயர்ந்துள்ளது என்றார்.

“ஒவ்வொரு முறையும் பருவமழைக் காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதுடன், சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள பிரச்சனைகள் தொடர்பில் புகார்கள் வரும்.

“எனவே, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் காய்கறிகள் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்வதில் மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் (FAMA) பங்கு வகிக்கும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, இந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தானில் உள்ள 10,628 நெல் விவசாயிகளுக்கு RM6.3 மில்லியன் அடங்கிய 2 ஆம் கட்ட சிறப்பு பண உதவியை (BKST) முகமட் வழங்கினார்.

“கேபிகேஎம் அதன் துறைகள் மற்றும் ஏஜென்சிகளுடன் இணைந்து வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைத்து இலக்கு குழுக்களுக்கும் மலேசியா மடாணியின் கீழ் உதவ எப்போதும் தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles