தைப்பூசத்தின் போது ஒரு தேங்காயை உடையுங்கள்; இறக்குமதி செய்யும் தேங்காய்களின் தரமும் சரியில்லை; பக்தர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் 

பல ஆண்டு காலமாக ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் சுமார் 80,000 வரை தேங்காய்களை விநியோகம் செய்து வந்த பினாங்கை சேர்ந்த ஒரு தேங்காய் வியாபாரி இந்த பிப்ரவரி மாதம் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்தின் போது ஒரு தேங்காய்கூட பக்தர்களுக்கு விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் அவர்களின் தென்னை தோப்பில் தேங்காய்கள் குறைந்துவிட்டன. மரம் உண்டு ஆனால் காய்கள் இல்லை.

ஆகவே இந்த ஆண்டு பினாங்கு தைப்பூசத்தின் போது தேங்காய்களின் உடையல் குறைவாக இருக்கும்.

இதன் காரணமாக தேங்காய்களின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால்  அதன் விலையும் அதிகரித்துவிடும் என எச்சரிக்கை விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இப்பொழுதே சில கடைக்காரர்கள் ஒரு தேங்காயை மூன்றிலிருந்து 4 ரிங்கிட் வரை விற்க தொடங்கி விட்டனர்.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் மூன்று வெள்ளிவரை விற்கப்படுகின்றன.

ஆனால் கெட்டுப்போன தேங்காய்களும் அதிகம் சந்தைக்கு வந்துள்ளன. பயனீட்டாளர்கள் அவற்றை சரியாக தேர்வு செய்து வாங்க வேண்டும்.

ஆகவே தைப்பூசத்தின் போது  ஒரு தேங்காயை மட்டும் உடைக்க வேண்டும் என பக்தர்களுக்கு பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக அச்சங்கத்தின் கல்வி, ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

தைப்பூசத்தை முன்னிட்டு அதிகம் லாபம் பெற வேண்டும் என்பதற்காக சில வியாபாரிகள் அதிக விலைக்கு விற்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி  வாங்குவதை பயனீட்டாளர்கள் புறக்கணிக்க வேண்டும்.

தேங்காய் உடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பணம், இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் சமூகத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படலாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தைப்பூசத்தின் போது தேங்காய் உடைப்பது இந்து பக்தர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரிய சடங்கு.

முழு உறுதியுடனும் பக்தியுடனும் செய்யப்படும் கடவுளின் பாதங்களில் ஒருவரின் அகங்காரத்தை சரணடைவதன் அடையாளப் பிரதிநிதித்துவம் இது.

உடைந்த தேங்காயைச் சேகரித்து, அதை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

உணவுப் பொருள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்யும் இந்து மதப் பழக்கவழக்கங்களின் அழகு இதுதான்.

கடவுளுக்குப் படைக்கப்பட்ட எந்த உணவுப் பொருளையும் பிரசாதமாகக் கருதி, பக்தர்கள் உண்ண வேண்டும், வீணாகக்கூடாது என்பது ஐதீகம். 

ஒவ்வொரு இந்து மத சடங்குகளிலும் தேங்காய் அதன் உயர் மட்ட ஊட்டச்சத்து காரணமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்துக்கள் தேங்காயை தங்கள் சமையலில்  பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையாக பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக சீன சமூகத்தைச் சேர்ந்த பல பக்தர்கள் தேங்காய் உடைக்கும் விழாவிற்குப் பின்னால் உள்ள காரணங்களைத் தவறாகத் தெரிந்து கொள்கின்றனர்.

எவ்வளவு தேங்காய் உடைக்கிறோமோ அவ்வளவு அதிர்ஷ்டம் தங்களுக்குப் பொழிகிறது என்று நினைக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைக்கிறார்கள், அவை இறுதியில் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றது. எரிக்கப்பட்டு, இறுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகைகளாக மாறுகிறது என்றார் சுப்பாராவ்.

குறிப்பாக தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை வாங்க பணம் செலவழிப்பது புத்திசாலித்தனமாக கருதப்படவில்லை.

தேங்காய் அதிக விலைக்கு விற்கப்பட்டால், பயனீட்டாளர்கள் தேங்காய்களை வாங்கக்கூடாது என்றும், ஒரு தேங்காயை உடைக்குமாறு பக்தர்களை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்த விரும்புகிறது.

பயனீட்டாளர்கள் அதிக கட்டணம் செலுத்தினால் விலை மேலும் உயரும். விலையைக் குறைப்பது பயனீட்டாளரின் கடமையாகும்.

இந்து பக்தர்கள் இந்த தேங்காய் உடைக்கும் உண்மை நிலையை சிந்தித்து, சரியான மத நடைமுறைகளை பின்பற்றி இளைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக மாறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சுப்பாராவ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles