பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது: போலிஸ்

பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவரை போலிசார் கைது செய்தனர்.

உலு சிலாங்கூர் போலிஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரிம் இதனை கூறினார்.

சிலாங்கூர் உலுசிலாங்கூர் பத்தாங்காலியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் சிறுமியை ஆடவர் பாலியல் சேட்டைகளை புரிந்தார்.

சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய இந்த சம்பவம் தொடர்பாக போலிசாருக்கு புகார் கிடைந்தது.

இதனைத் தொடர்ந்து  19 வயது ஆடவரை போலிசார் கைது செய்தனர்.

கைதான ஆடவரிடம் போலிசார்  விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக் காவல் விண்ணப்பத்திற்காக சந்தேக நபர் நாளை கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

– பார்த்திபன் நாகராஜன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles