இந்தியர்களுக்கு MiSI வழங்குகின்ற திறன் பயிற்ச்சிகள்; அவர்கள் தொழில்முனைவோராக மாறுவதற்கான அடித்தளத்தை வழங்குகிறது. :- டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ

பட்டர்வொர்த், ஏப் 24-

மனிதவள அமைச்சகத்தின் (KESUMA) கீழ் இயங்கும் மலேசிய இந்திய திறன் முன்னெடுப்பாடு எனும் (MiSI) ஏற்பாடு செய்து நடத்திய துரித உணவு உணவகம் மற்றும் விருந்தோம்பல் பயிற்சி நிறைவு பெற்றது.

இப்பயிற்சி திட்டத்தின் நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவில் பினாங்கு மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகக் குழு ஆட்சி குழு உறுப்பினரும் சுங்கை பகாப்  சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ  சுந்தரராஜூ சோமு கலந்து கொண்டார்.

நடைபெற்ற ஆறு நாள்  தீவிர நடைமுறைப் பயிற்சியை 25 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட வேளையில், மேலும் அவர்களில் பலர் பினாங்கைச் சுற்றியுள்ள துரித உணவு உணவகங்களில் வேலை வாய்ப்புகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் மலேசிய இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், உணவு மற்றும் பானத் துறையில் தொழில்முனைவோராக மாறுவதற்கான அடித்தளத்தையும் வழங்குகிறது.

மனிதவள அமைச்சரும் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினருமான  ஸ்டீவன் சிம் அவர்களின் முற்போக்கான தலைமைத்துவத்திற்கும், குறிப்பாக மலேசிய இந்திய சமூகத்தினரிடையே மனித மூலதன மேம்பாட்டை மேம்படுத்துவதில் அவர் காட்டிய உயரிய அர்ப்பணிப்புக்கும் டத்தோஸ்ரீ சுந்தராஜூ தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இது போன்ற முயற்சிகள், அனைவரையும் உள்ளடக்கிய, திறமையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை  தெளிவாக பிரதிபலிப்பதாகவும் அவர் சொன்னார்.

பினாங்கில் இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை வழங்க இதுபோன்ற திட்டங்கள் இன்னும் பல செயல்படுத்தப்படும் என்றும் டத்தோஸ்ரீ சுந்தராஜூ நம்பிக்கை தெரிவித்தார் நம்புகிறேன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles