சிலாங்கூர் மாநில அரசு மூத்த குடிமக்கள் -மாற்றுத் திறனாளிகளுக்கு RM1,000 மரண சகாய உதவி நிதி திட்டம்!

ஷா ஆலம், மே 7: தகுதியுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு RM1,000 இறப்பு நிதியாக உதவி வழங்கும் கைரட் டாருல் எஹ்சான் (KDE) திட்டத்திற்கான முன்பதிவை சிலாங்கூர் மாநில அரசு தொடங்கியுள்ளது.

ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE), இல்திசாம் சிலாங்கூர் சிஹாட் (ISS) மற்றும் சிலாங்கூர் பொது காப்பீட்டுத் திட்டம் (INSAN) போன்ற மாநில நலத்திட்டங்களைப் பெறுபவர்களுக்கு மே 6 முதல் முன்கூட்டியே பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக சமூக நல ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் https://kde.yawas.com.my என்ற வலைத்தளம் மூலம் தங்கள் தகவல்களை உறுதிப்படுத்தி இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர வேண்டும் என அன்பால் சாரி கூறினார்.

“உறுப்பினர்களாக இல்லாதவர்கள் அதே வலைத்தளம் மூலம் பதிவு செய்யலாம். “யாவாஸ் அறக்கட்டளை (YAWAS) அனைத்து விண்ணப்பங்களையும் பரிசோதிக்கும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

விண்ணப்பப் பரிசோதனை செயல்முறை யாவாஸ் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. கூடுதல் தகவல்களை மாநில சட்டமன்ற சேவை மையம் அல்லது யாவாஸ் ஹாட்லைனில் பெறலாம் என்று அன்பால் கூறினார்.

20,000 பெறுநர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்த சிலாங்கூர் பட்ஜெட் 2025இல் மொத்தம் RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles