
கோலாலம்பூர் ஜூன் 29-
அங்கத்தினர்களின் நலன்களை சிறந்த முறையில் காக்கும் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் சேவைகள் மிகவும் பாராட்டுக்குரியது என்று விலாயா மாநில பேராளர் டத்தோ தேவசகாயம் தெரிவித்தார்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப.சகாதேவன், தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ எஸ்.கிளி ரத்னராஜ் ஆகியோர் தலைமையில் தேசிய நில நிதிக் கூட்டுறவு கழகம் சீரும் சிறப்புடன் விளங்குவது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர் .
அங்கத்தினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடனுதவி, துன் சம்பந்தன் உபகார சம்பளம், எஸ்பிஎம் – எஸ்டிபிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது
அதேபோல்
வீட்டு கடனுதவி, அங்கத்தினர்களுக்கு மருத்துவ நிதி, மரண சகாய நிதி, இருதய அறுவை சிகிச்சை நிதி, கண் அறுவை சிகிச்சை நிதி, புற்றுநோய் – சிறுநீரக சிகிச்சை நிதி, மூத்த அங்கத்தினர்களுக்கு உதவி நிதி என்று பல உதவிகள் வழங்கப்படுகிறது.
இது தவிர்த்து அங்கத்தினர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதும் மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

