மாணவர்களுக்கான RM100 மடாணி புத்தக வவுச்சர்கள் விநியோகம்

புத்ரஜெயா, செப் 11: உயர்கல்வி நிறுவனங்களின் (IPT) மாணவர்களுக்கான RM100 மதிப்புள்ள மடாணி புத்தக வவுச்சர் விநியோகம் டிசம்பர் 12 வரை செயல்படுத்தப்படும். இதன் மூலம் பொது பல்கலைக்கழகங்கள் (UA), பாலிடெக்னிக் கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைகழங்கள் உட்பட 500,000 மாணவர்கள் பயனடைவார்கள்.

மாணவர்களின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் மடாணி அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாக உயர்கல்வி அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.

இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக இளங்கலை பட்டதாரிகளிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதையும், புத்தகத் துறையின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

“நாட்டின் சிறந்த திறமையாளர்களை உருவாக்குவதில் அமைச்சகத்தின் முக்கிய கவனம் செலுத்துவதற்கு ஏற்ப, தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் தங்கள் அறிவை அதிகரிக்கவும், சுய விழிப்புணர்வை மேம்படுத்தவும் இந்த புத்தக வவுச்சரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று KPT நம்புகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சர்களை https://mysiswaplace.my/ (MySiswaPlace) என்ற போர்டல் மூலம் கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்கள், குறிப்புப் பொருட்கள் மற்றும் பலவற்றை வாங்கப் பயன்படுத்தலாம்.

— BERNAMA

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles