இம்மாத இறுதியில் (BUDI95) செயல்படுத்தப்படும் !

கோலாலம்பூர், செப் 22 – எதிர்வரும் செப்டம்பர் 30 முதல், மலேசியா மக்களின் நலனுக்காக BUDI MADANI RON95 (BUDI95)க்கு இலக்கு மானிய முறையை செயல்படுத்தப்படும் என பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

தற்போதைய RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM2.05 உடன் ஒப்பிடும்போது, மலேசியர்கள் எதிர்வரும் செப்டம்பர் 30 முதல் லிட்டருக்கு RM1.99க்கு வாங்க முடியும். குடிமக்கள் அல்லாதவர்கள் அல்லது இந்த உதவி பெற தகுதியற்றவர்கள், நிதி அமைச்சகத்தால் மானியம் இல்லாத அளவில், லிட்டருக்கு RM2.60 என மதிப்பிடப்பட்ட விலையில் RON95 வாங்குவார்கள்.

“வருமான அளவைப் பொருட்படுத்தாமல், செயலில் உள்ள ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அனைத்து குடிமக்களும் தானாகவே BUDI95இன் நன்மைகளை அனுபவிக்கத் தகுதி பெறுவார்கள். இது மலேசியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சலுகை ஆகும் ” என்று அன்வார் கூறினார்.

“BUDI95 செயல்படுத்துவதன் வழி கிடைக்கும் சேமிப்பு, மக்களின் நலனுக்காக, ரஹ்மா ரொக்க பங்களிப்பு (STR) மற்றும் ரஹ்மா அடிப்படை பங்களிப்பு (SARA) திட்டங்கள் மூலம் மறுபகிர்வு செய்யப்படும்.

இதற்கிடையில், சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு சேவைகளை மேம்படுத்துவதிலும் அரசாங்கத்தின் கவனம் தொடர்ந்து செலுத்தப்படும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

அனைத்து குடிமக்களும் மாதத்திற்கு 300 லிட்டர் வரை மாதாந்திர RON95 மானிய உச்சவரம்பைப் பெற தகுதியுடையவர்கள். மின்-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு தகுதி உச்சவரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் பணி தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக கூடுதல் தகுதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மலேசியாவில் 99%க்கும் அதிகமான தனியார் வாகன ஓட்டுநர்கள் இந்தத் அளவுக்குள் RON95யை பயன்படுத்துகிறார்கள் என புள்ளிவிவரத் துறையின் ஆய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இந்த மாதாந்திர தகுதி உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles