மலேசியத் தமிழர்களின் பெருமை!திறமைகளின் தளபதி! அங்கீகாரத்தின் அடையாளம் தேசம் அனைத்துலக ஐகோன் விருது!

கோலாலம்பூர்,அக்.25-
கடந்த 2010ஆம் ஆண்டு பத்து பேருடன் தொடங்கிய தேசம் ஊடகத்தின் விருது பயணம்,
இன்று ஆயிரம் பேரின் வெற்றிக் குரலாக ஒலிக்கிறது.

திறமைகளை அடையாளம் கண்டு கௌரவிப்பதே தேசத்தின் நோக்கம்.
வர்த்தகம் முதல் ஊடகம் வரை,
கலைஞர்கள் முதல் சமூக செயற்பாட்டாளர்கள் வரை,
அனைத்து துறைகளிலும் தங்கள் தடத்தை பதித்த திறமையாளர்களுக்கு
தேசம் ஊடகம் வழங்கும் உயரிய மரியாதை தேசம் அனைத்துலக ஐகோன் விருது!

தேசம் ஊடகம், 2009ஆம் ஆண்டு துவங்கி,
இன்று முன்னணி இணைய ஊடகமாக திகழ்கிறது.
தனித்தன்மை, நம்பிக்கை, நியாயம் — இவை தேசத்தின் அடையாளங்கள்.

இந்த ஆண்டு 2025ஆம் ஆண்டுக்கான தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா
நவம்பர் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு,
பத்து கேவ்ஸ் Shenga Convention Hall-ல்
பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

50 திறமையாளர்கள் — 50 வெற்றிக் கதைகள்!
அவர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு, சாதனை —
இவை அனைத்தும் தேசம் மேடையில் ஒளிரவிருக்கின்றன.

இவ்வாண்டு முதன்முறையாக,
தேசம் அறிமுகம் செய்கிறது —
ஒரு தனிப்பட்ட, உயரிய அங்கீகாரம்…
“தேச தளபதி” விருது!
இந்த விருது — ஒருவரின் உச்சமான வெற்றியை,
அவரின் தாக்கத்தை, அவரது பிரமாண்டத்தை
மலேசியா முழுவதும் பெருமையுடன் வெளிப்படுத்தும்!

தேசம் ஊடகத்தின் 17ஆம் ஆண்டுப் பயணம்,
ஒரு ஊடகத்தின் வெற்றியை மட்டும் அல்ல,
மலேசியத் தமிழரின் சாதனைகளின் வரலாறாகும்.

தேசம் அனைத்துலக ஐகோன் விருது —
அங்கீகாரத்தின் உயர்ந்த மேடை,
திறமைக்கான மரியாதை,
தேசத்தின் பெருமை!

தேசம் – திறமையை கௌரவிக்கும் ஊடகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles