அதிபர் டிரம்ப்பிற்கு மலேசிய மக்கள் வழங்கிய வரவேற்பு குறித்து அமெரிக்கா தூதர் கேகன் பாராட்டு

கோலாலம்பூர், அக் 28: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு மலேசிய மக்கள் வழங்கிய அன்பும் வரவேற்பும் குறித்து அமெரிக்க தூதர் எட்கார்ட் டி. கேகன் பாராட்டினார். இந்த பயணம் மலேசியா–அமெரிக்க உறவுகளில் புதிய தொடக்கம் என்று கூறினார்.

“தற்போது இருநாட்டு உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறோம். அமெரிக்கா மற்றும் மலேசியா பல முக்கிய துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன,” என்றார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வணிக ஒப்பந்தங்களை முடிக்கவும், கம்போடியா–தாய்லாந்து சமாதான ஒப்பந்த கையொப்ப விழாவையும் காணவும், ஆசியான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள கோலாலம்பூருக்கு வந்திருந்தார்.

டிரம்ப் மலேசியாவை மிகவும் விரும்பினார் என கேகன் கூறினார்.

“அதிபர் மலேசியாவிலிருந்து புறப்படும் முன், ‘மலேசியா எவ்வளவு சிறந்த நாடு என்பதை உலகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியாக அடைகிறேன்’ என பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்தார்.

மலேசியா ஒரு அழகான நாடு மட்டுமல்ல, அமெரிக்காவின் நம்பகமான நண்பராகவும் இருப்பதை இந்த பயணம் காட்டுகிறது.

அமெரிக்கா–மலேசியா வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கேகன் கூறினார்.

இந்த பயணத்தின் போது, டிரம்ப் மற்றும் அன்வார், தாய்லாந்து பிரதமர் மற்றும் கம்போடியா பிரதமர் ஆகியோர் கையொப்பமிட்ட “கோலாலம்பூர் சமாதான ஒப்பந்தத்தை” பார்வையிட்டனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவந்தது.

ஜூலை 24 அன்று தொடங்கிய எல்லை மோதலுக்குப் பிறகு, மலேசியா நான்கு நாட்களில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இரு நாடுகளின் தலைவர்கள் தங்கள் மக்களுக்கும் பிராந்தியத்திற்கும் நன்மை செய்வதில் காட்டிய துணிவை கேகன் பாராட்டினார்.

டிரம்ப் திங்கட்கிழமை மலேசியாவிலிருந்து புறப்பட்டு, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குச் சென்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles