பந்திங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

பந்திங், அக் 31: பந்திங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் அவர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட, பந்திங் சட்டமன்றத் தொகுதி மக்களின் திறந்த இல்ல உபசரிப்புக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்த நிகழ்வு, வரும் 2025ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சுங்கை மங்கிஸ் பொது மக்கள் மண்டபத்தில் (Dewan Orang Ramai Sungai Manggis) நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒளிமயமான இந்தப் பண்டிகையை, நல்லிணக்கத்துடனும் பல்லின மக்கள் மத்தியிலான ஒற்றுமை உணர்வுடனும் கொண்டாடும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு, தொலைக்காட்சிப் பெட்டி, சலவை இயந்திரம், மூக்குத்தி, மிதிவண்டி மற்றும் பல பரிசுப் பெட்டகங்கள் உட்படப் பல்வேறு அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

பந்திங் சட்டமன்றச் சமூக சேவை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வந்து, பந்திங் மக்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாட வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles