
தேசிய முன்னணியை விட்டு வெளியேறினாலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தலைமையை மஇகா ஆதரிக்கும். மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
தேசிய முன்னணியை விட்டு மஇகா வெளியேறுவது குறித்து மஇகா மத்திய செயலவை முடிவு செய்யும் என பேராளர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
ஆக பேராளர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மஇகாவின் மத்திய செயற்குழு ஆய்வு செய்யும். கட்சியின் எதிர்கால திசையை முடிவு செய்யும் அதிகாரத்தை பிரதிநிதிகள் தனக்கும், மத்திய செயலவை குழுவிற்கும் வழங்கியுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையை ஆதரிப்பதில் மஇகா முழுமையாக உறுதியாக உள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் இன்னும் உறுதியாக இருக்கிறோம். மஇகா மாநாடு முடித்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

