மலேசிய பயணிகள் சோங்க்லா பயணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க அறிவுருத்து

சோங்லா, நவம்பர் 23- தாய்லாந்தின் தெற்குப் பகுதிக்குப் பயணம் செய்வதை ஒத்திவைக்குமாறு சோங்லாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ச்சியான கனமழை காரணமாக தெற்கு தாய்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சோங்லாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் அஹ்மத் ஃபஹ்மி அஹ்மத் சர்காவி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தெற்கு தாய்லாந்தில் உள்ள மலேசியர்கள் வானிலை மாற்றங்கள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்கவும், அவ்வப்போது உள்ளூர் அதிகாரிகளின் அறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், தனிப்பட்ட பாதுகாப்பைப் பராமரிக்கவும் அஹ்மத் ஃபஹ்மி அறிவுறுத்தினார்.

எந்தவொரு தூதரக உதவிக்கும், மலேசியர்கள் பணியில் உள்ள அதிகாரியை +66 81 990 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது mwsongkhla@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

மேலும் நேற்று இரவு முதல், 4,000க்கும் மேற்பட்ட மலேசிய சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் சடாவோ வழியாக மலேசியா திரும்ப விரும்பியவர்கள் அடங்குவர், ஆனால் ஹட்யாய் நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டதால், ஹோட்டல்களில் சிக்கித் தவித்தவர்களும் ஹட்யாய் நகரத்திலிருந்து சடாவோவுக்குச் செல்லும் பிரதான சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

சிக்கித் தவித்தவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற உள்ளூர் அதிகாரிகள் உணவு மற்றும் படகுகளை வழங்குவதன் மூலம் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சித்திபோங் கூறினார். மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்குச் சொந்தமான வாகனங்களில் எத்தனை வாகனங்கள் நீரில் மூழ்கின என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles