
அரசாங்கத்தில் எந்தவொரு பதவியும் இல்லை என்றாலும் மஇகா கட்சியை சிறந்த முறையில் வழிநடத்தி கொண்டிருக்கும் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு பக்கம் பலமாக இருப்போம் என்று மத்திய செயற்குழு உறுப்பினர் சதாசிவம் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவாக இருப்போம்.
மஇகா மீண்டும் எழுச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

