பக்கத்தான் ஹராப்பானை வெற்றி பெற செய்யுங்கள் – சிலாங்கூர் மந்திரி பெசார் வேண்டுகோள்

ஜொகூர் பாரு ஜூலை 10-
ஜொகூர் மாநிலத் தேர்தல் (PRN) பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தை, “ஜொகூர் இந்திய சமுதாயத்துடன் இசை இரவு” நிகழ்ச்சியின் மூலம் ஜொகூர் இந்திய சமூகத்தினருடன் இணைந்து நிறைவு செய்தேன். என்னுடன்.

கெஅடிலான் (KEADILAN) மத்திய தலைமைக் குழு உறுப்பினரும், தேசிய ஒற்றுமை துணை அமைச்சருமான திரு. யுனேஸ்வரன் ராமராஜும் கலந்து கொண்டார்.

எனது உரையில், முன்னர் பத்து கேவ்ஸ் (Batu Caves) என அழைக்கப்பட்ட சுங்கை துவா மாநில சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். அந்தக் காலகட்டத்தில், இந்திய சமூகத்தைச் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை பரஸ்பர புரிதல், ஒற்றுமை மற்றும் அனைத்து தரப்பினரின் நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் வெற்றிகரமாக தீர்க்க முடிந்தது.

அதேவேளை, நாட்டின் பிரபல ராப் கலைஞரான திரு. யோகி பி மற்றும் அவரது குழுவினரின் சிறப்பான இசை நிகழ்ச்சியையும் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் நிகழ்த்திய உற்சாகமான கலைநிகழ்ச்சி, நான் புறப்படும் வரை அங்கு கூடியிருந்த அனைவரையும் மகிழ்வித்தது.

கலை, கலாசாரம் மற்றும் ஒற்றுமையை ஒன்றிணைத்த இந்த இனிய இரவு, நமது பன்முகத்தன்மையே நம்மை வலிமையாக இணைக்கும் மிகப்பெரிய சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

அருமையான ஏற்பாட்டிற்காக அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள் ஜோகூர்!

சரியான முடிவை எடுங்கள். நிலைத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் பக்காத்தான் ஹராப்பானுக்கு உங்கள் வாக்கை அளிக்குங்கள்.

டத்தோஸ்ரீ அமிரூடின ஷாரி
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles