
தம்பின் ஜூலை 31-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலையான அரசாங்கம் அமைய பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள் என்று நெகிரி இந்தியர்களை ரெப்பா சட்டமன்ற வேட்பாளர் வீரப்பன் கேட்டுக் கொண்டார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது.
இந்தியர்களுக்கு அதிக அளவில் உதவிகளை செய்துள்ளது.
குறிப்பாக தமிழ் பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கு மிகப்பெரிய அளவில் மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளது.
அந்த வகையில் நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்கள் பிளவு படாத ஆதரவை பக்கத்தான் ஹராப்பானுக்கு வழங்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

