அமைச்சர் செங்கோட்டையனுடன் மலேசிய பேராளர்கள் சந்திப்பு!

சென்னை ஆக 18-
மலேசிய தமிழர் சமூக பண்பாட்டு நட்புறவு பயணம் மேற்கொண்டு 14 பேர் கொண்ட குழுவினர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளார்கள்.

எஸ் பி. மணிவாசகம் தலைமையில் இந்தப் பயணம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது .

நேற்று தமிழக அமைச்சர் செங்கோட்டையனை இந்த குழுவினர்கள் சந்தித்தார்கள்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மணிவாசகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதுபோல டத்தோ கோபாலகிருஷ்ணன் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.

மணிவாசகம் பேசும் போது புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 110ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக மலேசியாவில் நடைபெறுகிறது.

இதற்கு தங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் மலேசியாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்

அமைச்சரும் முடிந்தவரை வருகிறேன் என்னுடைய கட்சிக்காரர்களையும் முக்கிய அதிகாரிகளையும் வரச் சொல்வேன் என்றார்

பல வருடங்களாக எம்ஜிஆர் மன்றத்தை நடத்தி இதன் மூலம் எம்ஜிஆர் புகழை பரப்பி வருவதாக மணி வாசகம் அமைச்சரிடம் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles